Monday, June 21, 2010

Obey

அர்ப்பணிப்பு

வேதபகுதி: அப்போஸ்தலர் 9 : 1 - 18

"ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். " அப்போஸ்தலர் 9:6 a


தேவனுடையப் பிள்ளைகளைக் கட்டி துன்பப்படுத்தும்படி சவுல் பிரதான ஆசாரியரிடத்திலே நிருபங்களை வாங்கிக் கொண்டு தமஸ்குவை நோக்கிச் செல்லுகின்ற வழியிலே தேவன் சவுலைச் சந்திக்கின்றார். அந்த இடத்திலேயே ஆண்டவரே நீர் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்று சவுல் தன்னை அர்ப்பணிக்கின்றார். ஆண்டவரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து அர்ப்பணித்தபடியினால் கர்த்தர் சவுலை பவுலாக மாற்றி வல்லமையாக எடுத்துப் பயண்படுத்தினார். புறஜாதிகள் அநேகரைக் கர்த்தருக்குள்ளாகக் கொண்டு வருவதற்கும் அநேகச் சபைகளை உருவாக்குவதற்கும் பவுல் அப்போஸ்தலன் காரணமாக இருந்தார்.


வேதாகமத்தில் அநேகர் தங்களை ஆண்டவரின் அழைப்பிற்கு இணங்கி தங்களை அர்ப்பணித்துப் பெரிய காரியங்கள் அவர்களால் செய்யப்படவும் அவர்களும் அவர்களுடையக் குடும்பங்களும் அசீர்வாதம் பெற்றிருக்கிறார்கள். நாமும் நம்மை கர்த்தருடையச் சத்தத்திற்குச் செவிகொடுத்து அர்ப்பணித்து அருடையச் சித்தத்தின்படி நடப்போமானால் நாமும் நம்முடையக் குடும்பங்களும் ஆசீர்வாதங்களைச் சுதந்தரிக்கும் மாறாக நாம் அவருடையச் சித்தத்தின்படி செய்யாமல் நம்முடைய மனம் போனபடிச் செய்வோமானால் நமது துன்ப நேரங்களில் அவரும் நம்மைக் கைவிட்டு விடுவார். நாம் அவருடைய சித்தத்தின்படி செய்யும் போது நமது துன்பங்களையெல்லாம் இன்பமாக மாற்றி விடுவார்.



சிந்தனை:
நான் கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கிறேனா?


ஜெபம்:
கிருபையுள்ள அன்பின் தேவனே நான் என்னையே உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன் நீரே என்னை உம்முடைய சித்தத்தின்படி வழிநடத்தும். ஆமேன்.